ஐந்து ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 3,000 ரயில்களை சேர்க்க திட்டம்
இந்நிலையை தவிர்க்கவும் வெயிட்டிங் லிஸ்ட் என்ற ஒன்றே இருக்கக் கூடாது, அனைவருக்கும் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், இந்திய ரயில்வே (Indian Railway) அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 3,000 ரயில்களை கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ளது. டிக்கெட்டுகளின் வெயிட்டிங் பட்டியலை நீக்கி, பயணிகளுக்கு எப்போதும் உறுதிப்படுத்தப்பட்ட பெர்த்களை வழங்கும் வகையிலான திட்டத்தை கொண்டு வர உள்ளது. தற்போது 800 கோடி பயணிக்கும் நிலையில், ஓராண்டில் 1,000 கோடி பயணிகள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக, என ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு வருடத்தில் சுமார் ஐந்து கோடி பேர் வெயிடிங் லிஸ்ட் பட்டியலில் டிக்கெட் பதிவு
டிக்கெட் முன் பதிவின் போது பெர்த் கிடைக்காததால், ஒரு வருடத்தில் சுமார் ஐந்து கோடி பேர் வெயிடிங் லிஸ்ட் பட்டியலில் டிக்கெட்டை பதிவு செய்கின்றனர் உள்ள பயணிகளை ரயில்வே தரவுகள் கூறுகின்றன. தற்போது ஒரு நாளில் பயணிகள் ஏற்றிச் செல்லும் 10,748 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இத்த திட்டத்தின் படி, 450 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 200 புஷ்-புல் ரயில்கள் ஆகிவற்றுடன் மற்ற மெயில்/எக்ஸ்பிரஸ் சேவைகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே கூறியுள்ளது.
ரயில்வே அதிக ரயில்களுக்கு இடமளிக்கும் வகையில் பாதை திறனை விரிவுபடுத்தும் அதே வேளையில், பிரத்யேக சரக்கு நடைபாதை செயல்பாடுகளும் ரயில் நெட்வொர்க்கில் இருந்து சுமைகளை கணிசமாகக் குறைத்துள்ளன. அதி வேக ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, நடப்பு நிதியாண்டில் ரயில்வே நெட்வொர்க் முழுவதும் 1,000 ரயில் மேம்பாலங்கள் மற்றும் ரயில் கீழ் பாலங்கள் ஆகியவற்றைக் கட்டுகிறது.
பண்டிகை கால சிறப்பு ரயில்கள்
பண்டிகைக் கால நெரிசலைக் கருத்தில் கொண்டு, ரயில்வே கடந்த ஆண்டு 2,614 சிறப்பு ரயில்களை இயக்கிய நிலையில், இந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலத்தில் 6,754 சிறப்பு ரயில்களையும் இயக்க திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் 36 லட்சம் பயணிகள் இந்த சேவையைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
No comments:
Post a Comment