செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை மார்க்கத்தில் இன்று முதல் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படுகிறது. - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Thursday, October 19, 2023

செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை மார்க்கத்தில் இன்று முதல் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படுகிறது.

செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை மார்க்கத்தில் இன்று முதல் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படுகிறது.


கீழ்கண்ட Unreserved Express ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும்.

1. ரயில் எண். 06682, செங்கோட்டை - திருநெல்வேலி Unreserved Express - காலை 06.40
2. ரயில் எண். 06684, செங்கோட்டை - திருநெல்வேலி Unreserved Express - காலை 10.00
3. ரயில் எண். 06658, செங்கோட்டை - திருநெல்வேலி Unreserved Express - மதியம் 02.35
4. ரயில் எண். 06681, திருநெல்வேலி - செங்கோட்டை Unreserved Express - காலை 09.45
5. ரயில் எண். 06687, திருநெல்வேலி - செங்கோட்டை Unreserved Express - மதியம் 01.50
6. ரயில் எண். 06657, திருநெல்வேலி - செங்கோட்டை Unreserved Express - மாலை 06.15

கீழ்கண்ட Unreserved Express ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்.

1. ரயில் எண். 06685, திருநெல்வேலி - செங்கோட்டை Unreserved Express - காலை 07.00
2. ரயில் எண். 06686, செங்கோட்டை - திருநெல்வேலி Unreserved Express - மாலை 06.00

திருநெல்வேலி – செங்கோட்டை மார்க்கத்தில் கடந்த சில தினங்களாக மின்சார ரயில் எப்போது இயக்கப்படும் என பயணிகள் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். அதை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் மின்சார இன்ஜின் கொண்டு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

25 ஆயிரம் வாட் மின்சாரம் பாயும்

இன்று முதல் திருநெல்வேலி – செங்கோட்டை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் நிலையில், ரயில் தண்டவாளத்தில் நடப்பவர்கள் அருகில் செல்லும் மின்கம்பிகளை தொடுதல், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மின்கம்பிகள் அருகேயுள்ள மரக்கிளைகளில் தீவனம் பறிப்பது, தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் பேசுவது உள்ளிட்ட செயல்களை தவிர்த்திட கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வழித்தடத்தில் 25 ஆயிரம் வாட் மின்சாரம் எப்போதுமே இருக்கும் என்பதால், கிராமப்புற மக்கள் தண்டவாளம் அருகே எச்சரிக்கையுடன் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

Popular

Post Top Ad